முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரத்குமாரை தோற்கடிப்பார்களாம்: பெருந்தலைவர் மக்கள் கட்சி சொல்கிறது

வியாழக்கிழமை, 17 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சரத்குமாரை தோற்கடிப்பார்களாம்: பெருந்தலைவர் மக்கள் கட்சி சொல்கிறது

நெல்லை,மார்ச்.- 17 - நாடார் சமுதாயத்திற்கு துரோகம் செய்த நடிகர் சரத்குமாரை தோற்கடிப்போம் என பெருந்தலைவர் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான நெல்லை நெடுமாறன் அளித்த பேட்டியில், நாடார் சமுதாயத்தின் நலன் காக்கவும், சிதறி கிடக்கும் சமுதாயத்தை ஒன்று சேர்க்கவும், அரசியல் உரிமைகளை மீட்டெடுக்கவும், சமுதாயத்தின் கோரிக்கைகளை அரசிடம் சொல்லவும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. கட்சியின் முதல் தலைவராக சரத்குமாரை தேர்ந்தெடுத்தோம். கட்சியை நிர்வகிக்க 11 பேர் அடங்கிய உயர்நிலைக் குழுவை உருவாக்கினோம். 

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினோம். அவரிடம் 7 தொகுதிகளை கேட்பது என்றும், அவ்வாறு தராவிட்டால் 52 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்றும் முடிவு செய்தோம். இந்நிலையில் கட்சித் தலைவர் சரத்குமார் ரகசியமாக அ.தி.மு.கவுடன் உடன்பாடு செய்து கொண்டு 2 தொகுதிகளுக்காக நாடார் சமுதாயத்திற்கு துரோகம் செய்து விட்டார். தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் சரத்குமார் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்போம். நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல் ராஜ், மாறநாடார் சங்க தலைவர் சுப்பிரமணி ஆதித்தன், துணை தலைவர் பீட்டர் ஜெபராஜ் ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்