எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஜன.22 - நடந்து முடிந்த சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களை போல் வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றியை மக்கள் ஆதரவுடன் பெறும் என்று மதுரை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மதுரை வடக்கு 1ம் பகுதி கழகம் சார்பில் அண்ணாநகரில் பகுதி கழக செயலாளர் எம்.என்.முருகன் தலைமையிலும், மதுரை மேற்கு 2ம் பகுதி கழகம் சார்பில் பழங்காநத்தத்தில் பகுதி கழக செயலாளர் பெ.சாலைமுத்து தலைமையிலும் எம்ஜிஆர் பிறந்ததின விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, மனித புனிதன் எம்ஜிஆர் தான் நடித்த படங்களில் கூட திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறி பறைசாற்றி வந்தார். அண்ணாவின் மடியில் விழுந்த கனியாக விளங்கிய எம்ஜிஆர் அண்ணாவின் இதயத்தில் புகுந்தவர். அண்ணாவின் மறைவிற்கு பின்னால் எம்ஜிஆரின் தயவால் ஆட்சிக்கு வந்த கருணாநிதி அண்ணாவின் கொள்கைகளையும்,கோட்பாடுகளையும் மறந்து விட்டு அண்ணாவின் இதயக்கனியாக இருந்த எம்ஜிஆரை பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி தூக்கி எறிந்தார். அன்று முதல் அண்ணாவின் கொள்கைகளை காப்பாற்ற வேணடும் என்ற ஒரே நோக்கத்தோடு அண்ணாவின் பெயரிலேயே மாபெரும் இயக்கத்தை தொடங்கி கழக கொடியில் அண்ணாவின் படத்தை பொறித்து அண்ணாவின் கொள்கைகளை ஒருங்கிணைத்து அண்ணாயிசம் என்று உருவாக்கி தமிழ்நாட்டின் தீய சக்தியான கருணாநிதியை இந்த நாட்டே விட்டே அப்புறப்படுத்துவேன் என்று சபதம் இட்டு, அந்த சபதத்தை நிறைவேற்றும் வகையில் தேர்தல் மூலம் மக்களை சந்தித்து அமோக வெற்றியை பெற்று கருணாநிதியை முதலமைச்சர் அரியணையில் இருந்து இறக்கி அதிமுகஆட்சியை தமிழகத்தில் உருவாக்கி தமிழ்நாட்டின் முதலமைச்சர் அரியணையில் இருந்து நாடு போற்றும் நல்லாட்சியை தந்தவர் எம்ஜிஆர். ஏழை, எளிய மக்களுக்கு வாரி, வாரி வழங்கினார். பள்ளிக்குழந்தைகளின் வயிற்று பசியை போக்க சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவுடன் கல்வியையும் புகட்டியவர் காலத்தால் அழியாமல் இன்று வரை மக்கள் மனதில் இருக்கின்றவர் எம்ஜிஆர். அவர் கொண்டு வந்த உலகம் போற்றும் சத்துணவு திட்டத்தை எதிர்க்கட்சியினர் கூட நிறுத்த முடியவில்லை. அப்படிப்பட்ட உன்னத தலைவன் எம்ஜிஆரின் ஒரே அரசியல் வாரிசாக முதல்வர் அம்மா இன்றைக்கு அதிமுக என்ற இயக்கத்தை கட்டிக்காத்து வருகிறார். எம்ஜிஆர் மறைவிற்கு பின்னால் பிளவு பட்ட கழகத்தை ஒன்றாக இணைத்து மீண்டும் மனித புனிதன் எம்ஜிஆரின் ஆட்சியை தமிழகத்தில் மலர செய்தார். கருணாநிதி ஆட்சியில் இருந்த போது மக்களை பற்றி சிந்திக்க வில்லை. தன்னுடைய மக்களையும்,பேரன், பேத்திகளை பற்றி உயர்த்துவதற்காக திட்டங்களை போட்டு தமிழகத்தை சுரண்டி சென்றுவிட்டார். ஆனால் தமிழக மக்களின் எதிர்கால நலனைகருத்தில் கொண்டு முதல்வர் அம்மா பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும் வருகிறார்.
தற்போது ஒரு கோடியே 85 லட்சத்து 59 ஆயிரத்து 754 குடும்பங்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி, பெண்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், லேப்டாப் மற்றும் நான்கு சீருடைகள் புத்தக பைகள், ஜாம்ரின்ரி பாக்ஸ் இப்படி எண்ணற்ற திட்டங்களை முதல்வர் அம்மா அமுல்படுத்தி வருகிறார். சமீபத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை செய்து ரூ.850 கோடியை தாயுள்ளத்தோடு முதல்வர் அம்மா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி உள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு விலையை உயர்த்திக்கொடுத்துள்ளார். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால் தன் சுய லாபத்திற்காக தமிழகத்தின் எல்லா வளங்களையும் கருணாநிதி காவு கொடுத்தார். அதன் விளைவு இன்றைக்கு முல்லைப்பெரியாறு, பாலாறு, காவேரி பிரச்சினைகள் தலைதூக்கி உள்ளது. மத்திய மந்திரியாக இருக்கும் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி இது போன்ற மக்கள் பிரச்சினையை பற்றி பாராளுமன்றத்தில் பேசாமல் மவுனமாகவே இருந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார். கடந்த ஆட்சியில் திமுகவினரால் அபகரிப்பு செய்யப்பட்ட 2400 ஏக்கர் நிலத்தில் இதுவரை 800 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அம்மா எடுத்த அதிரடி நடவடிக்கையே இதற்கு காரணம். அம்மாவின் ஆளும் திறனை கண்டு உலக அரசியல் வல்லுனர்கள் பாராட்டி வருகிறார்கள். அவரது ஆட்சி திறமை தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவை என்று வடநாட்டு பத்திரிகைகள் அனைத்தும் பாராட்டி எழுதி வருகின்றது. எனவே சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களை போல வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக அம்மாவின் தலைமையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றே தீரும். அப்படிப்பட்ட வெற்றிக்கனியை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பறித்து முதல்வர் அம்மா விரும்பும் மத்திய அரசை உருவாக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.