முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அய்யம்பாளையத்தில் தென்தமிழக அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

வத்தலக்குண்டு, ஜன.- 23 - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகிலுள்ள அய்யம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு தென் தமிழக அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் 2 நாட்கள் நடைபெற்றது. பெரியமாடு பிரிவில் கல்லணை விஸ்வா முதல் பரிசும், மதுரை பாண்டி கோவில் சாமி வண்டி 2வது பரிசும், உப்பார்பட்டி கெளசிக் மகாதேவ் 3ம் பரிசும், கெளசிக் மகாதேவின் மற்றொரு வண்டி 4வது பரிசும் பெற்றது. நடுமாடு பிரிவில் காரைக்குடி அழகுதேவி முதல் பரிசும், உப்பார்பட்டி ஜெய மகாதேவ் 2ம் பரிசும், திருச்சி துவாக்குடி நிதிஷ்குமார் 3வது பரிசும், மணிமேகலை 4ம் பரிசும் பெற்றனர். கரிச்சான் மாடு பிரிவில் கூடலூர் ஆணிக்காளை முதல் பரிசும், உப்பார்பட்டி ஜெயமகாதேவ் 2வது பரிசும், பரவை சீலைக்காரி வண்டி 3வது பரிசும், சின்னமனூர் தங்கம் வண்டி 4வது பரிசும் பெற்றனர். முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் தங்கக்காசுகளை வழங்கினார். இளைஞரணி துணை அமைப்பாளர் ஐ.பி.செந்தில்குமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர் முரளிதரன், தி.மு.க. நிர்வாகிகள் அஸ்வின் பிரபாகரன், கணேசன், கார்த்திக்கேயன், ரமேஷ், காமராஜ், ஜெயபாண்டியன், பாலசுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. பேரூர் செயலாளர் கென்னடி வரவேற்றார். துணைச் செயலாளர் அய்யப்பன் நன்றி கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்