முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்ற கோயில் தெப்பத் திருவிழா தொடங்கியது

புதன்கிழமை, 25 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஜன.25 - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முருகப் பெருமானின் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தெப்பத் திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதனை முன்னிட்டு நேற்று காலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பல்வகை அபிஷேகங்கள் முடிந்து சர்வ அலங்காரத்துடன் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். அங்கு யாகசாலை பூஜை முடிந்து கோயில் சிவாச்சார்யார்களால் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிக்கம்பத்தின் அடிப்பகுதியில் பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினம் சுவாமி ஒரு வாகனத்தில் காலை, மாலையில் எழுந்தருளி திருவீதியுலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். பிப்ரவரி 1 ம் தேதி காலையில் தெப்பம் முட்டுத்தள்ளும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து சிறிய வைர தேரோட்டமும் நடைபெறும். பிப்ரவரி 2 ம் தேதி ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் அமைக்கப்படும் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்