முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதரத்னா விருதுக்கு சச்சினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதா?

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 27 - பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் சச்சின் என்று பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ஆனால் பாரத ரத்னா விருதுக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. முன்னாள் ஹாக்கி வீரர் தயான்சந்த், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா, மலையேறும் வீரரான டென்னிஸ் நார்கோ ஆகியோரின் பெயர்களை பாரத ரத்னா விருதுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளது விளையாட்டு அமைச்சகம். ஆனால் சச்சினுக்கு வழங்குமாறு விளையாட்டு அமைச்சகத்துக்கு பி.சி.சி.ஐ. பரிந்துரை செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மக்கான் கூறுகையில், பாரத ரத்னா விருதுக்காக பரிந்துரை செய்யுமாறு எங்களுக்கு வரும் அனைவருடைய பெயரையும் நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமருக்கு அனுப்புவோம். எனக்கு தெரிந்தவரை தயான்சந்த், அபினவ் பிந்த்ரா ஆகியோருக்கு வழங்குமாறு மட்டுமே இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார். இது தொடர்பாக பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் கேட்ட போது, பாரத ரத்னா விருதுக்கு சச்சினின் பெயரை பி.சி.சி.ஐ. பரிந்துரைத்ததா என்று எனக்கு தெரியாது. பாரத ரத்னா விருது வழங்குவது அரசின் உரிமை என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால் சச்சின் பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்