முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு தலைநகரில் பயங்கர தீவிபத்து: 26 பேர் பலி

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

 

லிமா, ஜன.- 30 - பெரு நாட்டின் தலைநகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள். பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள், போதைக்கு அடிமையானவர்கள் என ஏராளமானவர்கள் இந்த மறுவாழ்வு மையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இம்மையத்தில் உள்ள 26 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடியுள்ளனர். இந்த முயற்சியில் 10 தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்