முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு ஒரு நாள் தொடரில் எங்களது ஆட்டம் வித்தியாசமாக இருக்கும்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சிட்னி, ஜன. - 31 - ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் எங்களது ஆட்டம் வித்தியாசமாக இருக்கும் என்று இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னாநம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0 - 4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. இதில் ரெய்னா இடம் பெற வில்லை.  இருந்த போதிலும், சிட்னியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் முத்தரப்பு ஒரு நாள் தொடர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் மேற்க ண்டவாறு தெரிவித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே முதலில் 4 போட்டிகள் கொண் ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதனைத் தொடர்ந்து முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடக்க இருக்கிறது.  இந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகள் கோப்பைக்காக களம் இறங்க காத்திருக்கின்றன. 

முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டி வரும் 5 -ம் தேதி துவங்குகின்றது. இதற்கிடையே இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஒரே ஒரு 20 -க்கு 20 போட்டி 2-ம் தேதி நடக்க இருக்கின்றது. இதற்காக இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன.  ஆஸி.யில் நடக்க இருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் குறித்து ரெய்னா மேலும் தெரிவித்ததாவது - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் எங்களது ஆட்டம் வித்தியாசமாக இருக்கும். சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்ற முயற்சிப்போம். இந்தத் தொடரில் நாங்கள் ஒருங்கிணைந்து ஆடி இந்திய அணியின் புகழை நிலை நாட்டுரோம்.  கடந்த முறை இங்கு ஒரு நாள் தொடரை வென்று இருக்கிறோம். முன்னதாக உலகக் கோப்பையையும் எங்களது அணி வென்றது. தவிர, மற்ற தொடர்களையும் வென்று உள்ளோம். பல வெற்றிகளைப் பெற்ற இந்திய வீரர்கள் ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறார்கள். எனவே இந்திய அணி இந்தத் தொடரில் வித்தியாசமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தும்.  டெஸ்ட் தொடர் வித்தியாசமானது. நான் அதில் பங்குகொள்ளவில்லை. ஆனால் தொலைக் காட்சியில் போட்டியை பார்த்தேன். ஆஸ்திரேலிய அணி டெஸ்டில் சிறப்பாக ஆடியது. 

அவர்களது ஆட்ட வியூகம் நன்றாக வேலை செய்தது. அவர்களது பெளலிங் நன்றாக இருந்தது. சரியான இடத்தில் பந்தை வீசினார்கள். துரதிர்ஷ்டவசமாக நமது வீரர்கள் இந்தத் தொடரில் சிறப்பாக ஆடவில்லை. அடுத்த தொடரில் அவர்கள் நன்கு ஆடுவார்கள் என்று நம்புகிறேன். 

கடந்த சில மாதங்களில் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கல் நன்றாக ஆடி உள்ளனர். எனவே இந்தத் தொடரிலும் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 

இந்திய அணிக்கு ஏராளமான இளம் வீரர்கள் வருகின்றனர்.அவர்கள் உள்நாட்டில் நடைபெற்ற முதல் தர கிரிக்கெட் போட்டியில் நன்றாக ஆடி உள்ளனர். நானும் நாலைந்து உள்நாட்டுப் போட்டியில் விளையாடி இருக்கிறேன். இதில் ஒரு இரட்டை சதமும் அடித்து இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்