முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதக்குண்டு தாக்குதலில் பாகிஸ்தானில் 9 பேர் பலி

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

லாகூர், பிப்.- 1 - பாகிஸ்தானில் மனித குண்டு வெடித்ததில் 9 பேர் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள பகாகுலாம் என்ற இடத்தைச் சேர்ந்த பழங்குடி தலைவர் காஜி அகோன்சதா. இவர் தனது வீட்டின் முன்பு அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது உடலில் வெடிகுண்டை கட்டிவந்த வாலிபர் அவர் அருகே வந்ததும், குண்டை வெடிக்கச்செய்தார். இதில் அகோன்சதா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் உட்பட 9 பேர் பலியானார்கள். 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவரைக் கொன்றவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. அன்சார் உல் இஸ்லாம் என்ற அமைப்புடன் பலியான சதாவுக்கு மோதல் போக்கு இருந்தது என்று கூறப்படுகிறது. எனவே அந்த இயக்கத்தினர் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்