முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

ஆண்டிபட்டி பிப் - 2 -ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை தொழில் நுட்ப நெசவுப்பூங்கா பணிகளில் ஊழல் செய்தவர்களை கைது செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்;ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் டி. பெருசு தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் ஞானம்மாள் முன்னிலை வசித்தார். மாவட்ட பொருளாளர்  கோபால் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். துேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சாமியார் மடத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 100 கோடி திட்டத்தில் வைகை உயர்தொழில் நுட்ப நெசவுப்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது, இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 20 ஆயிரம் நெசவாளர்கள் நேர் முகமாகவும் 10 ஆயிரம் நெசவாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெறும் வகையில் திட்டமிடப்பட்டு, தமிழக அரசு சார்பில் 4 கோடியே 72 லட்சம் ரூபாய் வங்கியில் போட்டது. மத்திய அரசு 2.5 கோடியும் 91 உறுப்பினர்கள் சார்பில் ஒன்றைகோடி நிதியும் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டது, அதனைதொடர்ந்து 40.6 ஏக்கர் இடம் வாங்கப்பட்டு 91 யூனிட்டுகள் செயல்பட கட்டுமானப்பணிகள் தொடர்ந்தன. ஆனால் 9 ஆண்டுகள் ஆகியும் பணிநிறைவு பெறாததால் நெசவாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாய் உள்ளது. மேலும் பூங்காவிற்கு இடம் வாங்கிய வகையிலும் ஊழல் நடந்திருப்பதாகவும், 15 ஆண்டுகளே தொழிற்சாலை கட்டிடம் ஆயட்காலமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பணிகள் 9 ஆண்டுகளாக நிறைவு பெறாததால் மத்திய அரசு இப்பணிகளை நிறுத்த உத்தரவிட்டு தேனி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் அனுப்பி தற்போது அதன் பேரில் விசாரனை நடந்து வருகிறது, இந்நிலையில் பணிகளை தொடர்ந்து நடத்தி 30 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் முடித்து தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், ஊழல் செய்தவர்களை கைது செய்யக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ்டுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சென்றாயப்பெருமாள், மாரியம்மாள், தமிழ் செல்வன், ராமசாமி, சீனிமுத்து, அன்னமுத்து, சாலமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விசைத்தறி பூங்காவிற்காக ஆரூண் எம்.பி. மத்திய ஜவுளி துறை அமைச்சர் தயாநிதி மாறன் மூலமாக ரூ. 120 கோடி ஒதுக்கீடு பெற்று தந்ததாக அவர் ஏற்கனவே அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்