முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுபதிபாண்டியன் கொலை:வள்ளியூர் கோர்ட்டில்மேலும் இருவர்சரண்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

நெல்லை, பிப் - 3 - பசுபதிபாண்டியன் கொலை வழக்கு தொடர்பாக வள்ளியூர் கோர்ட்டில் நேற்று மேலும் இருவர் சரணடைந்தனர். தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் கடந்த மாதம் திண்டுக்கல்லில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக விருதுநகரை சேர்ந்த சிவகாமிநாதன் மகன் நட்டு என்ற நடராஜன் (வயது 28), ராஜபாளையம் செட்டியார்பட்டியை சேர்ந்த செல்வம் மகன் பாஷா என்ற மாடசாமி (29) ஆகிய இருவரும் நேற்று வள்ளியூர் கோர்ட்டில் சரணடைந்தனர். குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் இருவரையும் 15 காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே பசுபதி பாண்டியன் கொலை தொடர்பாக வள்ளியூர் கோர்ட்டில் 2 பேரும் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் 2 பேரும் சரணடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்