முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குச்சாவடியை கைப்பற்றினால் இரண்டு ஆண்டு சிறை

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.19  - வாக்குச்சாவடியை கைப்பற்றினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.  தமிழக சட்டமன்ற தேர்தலில் நன்னடத்தை விதிகளை அமுல் படுத்துவதிலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதிலும் தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் தேர்தலில்  வன்முறையை தடுக்கவும், வாக்குச்சாவடிகளை கைப்பற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரவுடிகளை கைது செய்யவும் போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் தவிர மற்றவர்கள் வாக்குச்சாவடிகளுக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

  வாக்குச்சாவடிகளுக்குள் பூத் ஏஜெண்டுகள், வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் வாக்குச்சாவடியை கைப்பற்றினால் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135 ன் படி 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago