Idhayam Matrimony

ராவணனுக்கு 16-ந் தேதி வரை காவல் புழல் சிறையில் அடைப்பு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.- 4 - சசிகலாவின் உறவினர் ராவணன் திருப்nullரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்து தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட வழக்கில் நேற்று மாலை சென்னை ஆலந்தூர் nullநீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்தனர். பின்னர் புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். சசிகலாவின் உறவினர் ராவணன் கோவை காரமடையை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ரவிக்குமாரை மிரட்டி ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராவணன் மீது திருப்nullரை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்தார். அம்மனுவில் சிசிகலாவின் உறவினர் ராவணன் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்து தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்து விட்டதாக கூறி இருந்தார். இப்புகாரை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி ராவணனை மீண்டும் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கைது  செய்ததற்கான வாரண்டு நோட்டீசை கோவை மத்திய சிறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். ராவணனை முறைப்படி கைது செய்து நீnullதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோவை சென்று நேற்று கோவை சிறையில் இருந்து அழைத்து செல்வதற்கான நோட்டீசை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். பின்னர் ராவணனை பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் ஏற்றி சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் சென்னையில் ராவணனிடம் முதல்கட்ட விசாரணையை நடத்திய பின் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இதையடுத்து ராவணனிடம் வழக்கு பற்றி கூறிய குற்றவியல் நீதிபதி பாலசுப்பிரமணியன் வரும் 16-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.  இதற்கிடையே அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசார் மனு செய்தனர். இந்த மனு மீது திங்கட் கிழமை முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

 

க்ச்ச்சி டூச்சிடீ

ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய ராவணனை போலீசார் அழைத்து வந்தபோது எடுத்தபடம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்