எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன்,பிப். - 5 - ஆஸ்திரேலியாவில் இன்று துவங்க இருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலைமையிலான அணிக்கு எதிராக விளையடி வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் ஆஸி. அணி 4- 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டி - 20 போட்டி நடந்தது. இதில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் இந்தப் போட்டி 1- 1 என்ற கணக்கில் சமனாகியது. இதற்கு அடுத்தபடியாக முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகள் நடக்க இருக்கிறது. இதில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகள் மோதுகின்றன. முத்தரப்பு ஒரு நாள் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மெல்போர்னில் இன்று மோதுகின்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர் தோல்வியைச் சந்தித்தது. பின்பு 2-வது டி - 20 போட்டியில் வெற்றி பெற்றது. டி - 20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய வீரர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். டெஸ்ட் அணியில் இடம் பெற்ற மூத்த வீரர்கள் சரியாக ஆடாததால் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தது. ஆனால் ஒரு நாள் போட்டிக்கான அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இதனால் இந்திய அணியின் ஆட்டம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெய்னா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்து இருந்தார். அந்தப் பேட்டியில் டி - 20 மற்றும் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் ஆட்டம் வித்தியாசமாக இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். அது போலவே இந்திய அணி 2-வது டி - 20 போட்டியில் நன்கு ஆடி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பெளலிங்கில் பிரகாசித்தனர். டெஸ்ட் தொடரில் சரியாக ஆடாத காம்பீர் டி - 20 போட்டியில் நன்கு ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். கோக்லி மற்றும் கேப்டன் தோனி இருவரும் அவருக்கு பக்கபலமாக ஆடினர். அதே போல பெளலிங்கில் பிரவீன் குமார், வினய் குமார் இருவரும் நன்கு பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவினர். ஆல்ரவுண்டர் ஜடேஜா அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினார். தவிர, இந்தப் போட்டியில் இந்திய அணியின் பீல்டிங்கும் நன்றாக அமைந்தது.
எனவே முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.
சொந்த மண்ணில் நடைபெறுவதால் ஆஸ்திரேலிய அணிக்கு இது கூடுதல் பலமாகும். எனவே அந்த அணி கடும் சவாலை அளிக்கும். இலங்கை அணியும் ஒரு நாள் போட்டியில் சிறந்த அணியாகும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வீரரான டெண்டுல்கர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக ஆடவில்லை. அவர் இந்தத் தொடரில் நன்கு ஆடி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் அளித்துள்ள ஒரு பேட்டியில் முத்தரப்பு தொடரில் கோப்பையை வெல்ல எங்களுக்கே அதிக வாய்ப்பு என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணி சிறந்த அணியாகும். இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். இந்திய வீரர்கள் முழுத் திறனுடன் ஆடும் பட்சத்தில் எந்த ஒரு அணியையும் இந்தியா வீழ்த்தும்.
இன்று துவங்க இருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் வெற்றிக்காக 3 அணிகளும் முழுவீச்சுடன் களம் இறங்கும். மொத்தத்தில் இந்தத் தொடர் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பது உறுதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.