எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.- 5 - முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று நலத்திட்ட உதவிகள், ரத்ததானம்,மருத்துவ சிகிச்சை, சட்ட உதவி முகாம்கள் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் பிரிவு முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க. தலைமை நிலையத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வழக்கறிஞர்கள் பிரிவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதற்கு எஸ். சேதுராமன் வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் தலைமை தாங்கினார். பி.எச். மனோஜ்பாண்டியன் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் முன்னிலை வகித்தார். எம்.எல். ஜெகன் வட சென்னை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் வரவேற்றார். அ. தமிழ்மகன் உசேன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், செ. செம்மலை அமைப்புச் செயலாளர், கே.கே. கலைமணி மீனவர் பிரிவுச் செயலாளர் கருத்துரை வழங்கினார்கள். தாமல் டி. கண்ணா தென் சென்னை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் நன்றி கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முதல்வர் ஜெயலலிதாவின் 64ஆவது பிறந்த நாளை கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பாக தமிழகம் முழுவதும் ஏழை, எளியோர்க்கு உதவுகின்ற ஈகைப் பெருநாளாகவும், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், அரசு மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நல உதவிகள் வழங்குகின்ற நன்னாளாகவும், ரத்ததானம் மற்றும் மருத்துவ சிகிச்சை மற்றும் சட்ட உதவி முகாம்கள் உள்ளிட்டவற்றை நடத்தி, மக்களின் நல்வாழ்வு பேணுகின்ற நன்னாளாகவும், மரக் கன்றுகள் நட்டும், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கியும் உதவுகின்ற உவகைத் திருநாளாகவும் இந்நாளை கொண்டாடிட இந்தக் கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கியும், ஏழ்மை nullங்கிடவும், ஏழைகளை தாங்கிப் பிடித்திடவும் எண்ணில்லா நலத் திட்டங்களை அள்ளித் தந்தும், தமிழகத்தில் அறிவுசார் புரட்சியை உருவாக்கிடவும், உலகத் தரக் கல்வியை தமிழக மாணவர்களுக்கு தந்திடவும் கணினி முதல் காலணி வரை, கல்வி ஊக்கத் தொகை முதல் கணித உபகரணங்கள் வரை என அனைத்தையும் அள்ளித் தந்து, கலைமகளும் பாராட்டும் கல்விப் புரட்சிக்கு வித்திட்டும், இல்லாமை, கல்லாமை இரண்டும் போக்கிடும் இணையில்லா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சியை இந்த கூட்டம் போற்றி வணங்குகிறது. முல்லைப் பெரியாறு போன்றவற்றில் தமிழகத்தின் nullநீர் ஆதார உரிமைகளை நிலைநாட்டவும், கச்சத் தீவினை மீட்டெடுத்து, அலைகொண்ட கடல் மீது வலைகொண்டு வாழும் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிட போராடி வரும் கடமை மிகு கழக அரசின் முதலமைச்சரும், கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை கழக வழக்கறிஞர் பிரிவு நெஞ்சாரப் பாராட்டி, நெகிழ்ந்து போற்றுகிறது.
சமீபத்தில் தானே புயலால் பாதிப்புக்கு உள்ளான கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையிலான மீட்புப் பணிகளை களமிறக்கி, இந்தியாவிலேயே இதுவரையில் எந்த ஒரு அரசும் செய்திடாத அளவில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, சாலைகளை செப்பனிட்டு, மின் விநியோகத்தை சீரமைத்து, நிவாரண உதவிகளை வழங்கி நிகரில்லா சாதனை புரிந்ததோடு, அடித்த காற்றில் இழந்த கூரைகளை புத்தம் புதிய கான்கிரீட் வீடுகளாக கட்டித் தந்திட ஆயிரம் கோடி ரூபாயாக ஒதுக்கி, ஒரு லட்சம் வீடுகள் கட்டத் திட்டமிட்டிருக்கும் ஜெயலலிதாவை ஈகைப் பெருமுடிவை இக்கூட்டம் வணங்கி வரவேற்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்களை, ஆக்கிரமிக்கப்பட்ட உடமைகளை, பறிக்கப்பட்ட சொத்துக்களை, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது போலவே, கழகத்தின் ஆட்சி அமைந்ததும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்பட்ட அபகரிப்பு உடமைகளை மீட்டுத் தந்து, ஈடு இணையில்லா சாதனை படைத்திருக்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்மைத் திடத்தையும், நெஞ்சுறுதியையும் இக்கூட்டம் நன்றியோடு போற்றி மகிழ்கிறது.
தன்னை மெய்வருத்தி உழைக்கும் தாயின் முயற்சியால், நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் ஈடு இணையில்லா இமாலய வெற்றி, அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புத் தேர்தலிலும் சரித்திரமும் வியக்கும் வண்ணம் பெரு வெற்றி என்று வெற்றி மேல் வெற்றிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுத் தந்திருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாட்சிப் பெருமைகளை, நயமான திட்டங்களை, ஒளிவு மறைவில்லா ஒப்பற்ற நிர்வாகத்தின் பெருமைகளை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வண்ணம், கழக வழக்கறிஞர் பிரிவின் சார்பில் பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றின் வாயிலாக கொண்டு செல்லும் பணியை கடமை உணர்வோடும், கண்ணும் கருத்தோடும் கழக வழக்கறிஞர்கள் அனைவரும் செவ்வனே செய்து முடித்திட உளமாற உறுதி ஏற்கிறோம் என்றும் இக்கூட்டம் ஏகமனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.