எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன், பிப்.- 6 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எளிதில் வென்றது. ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஒரு நாள் உலகச் சாம்பியன் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் கலந்துகொண்டுள்ளன. இத்தொடரின் முதல் போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. மழையின் காரணமாக இந்த போட்டி 32 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆஸி. அணி புதுமுகங்களும் அனுபவ வீரர்களும் கொண்ட கலவையாக களமிறங்கியது. அந்த அணியில் மாத்யூ வாடே மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் ஒரு நாள் போட்டியில் முதன்முதலாக களமிறங்கினர். இவர்களில் வாடே மற்றும் வார்னர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கத்தில் இந்திய பந்துவீச்சு நன்றாக இருந்தது. குறிப்பாக வினய்குமார் சிறப்பாக பந்துவீசினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆஸி. அணி 15 ரன்கள் எடுத்திருந்தபோது 6 ரன்களை எடுத்திருந்த வார்னர், வினய்குமார் பந்தில் கிளீன்போல்டானார். இதையடுத்து களமிறங்கிய ரிக்கி பாண்டிங்கும் 2 ரன்கள் எடுத்த நிலையில் வினய்குமாரின் பந்தில் ரெய்னாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது ஆஸ்திரேலிய அணி 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் பங்கிற்கு 10 ரன்களை எடுத்து ரோகித் சர்மாவின் பந்தில் ராகுல்சர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால்14.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு ஆஸி. அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து துவக்க ஆட்டக்காரர் வாடேயுடன் மைக் ஹஸ்ஸி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய துவக்க வீரர் வாடே ஒருநாள் போட்டியில் தனது கன்னி அரை சதத்தை நிறைவுசெய்தார். 23-வது ஓவரில் ஆஸி அணி 122 ரன்களை எடுத்திருந்தபோது ரோகித்சர்மாவின் பந்தில் வாடே 67 ரன்கள் எடுத்த நிலையில் கிளீன்போல்டானார். இவரை அடுத்து டேவிட் ஹஸ்ஸி களமிறங்கினார். இரண்டு ஹஸ்ஸிக்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆஸி.யின் ரன் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் 32 பந்துகளில் 45 ரன்களை எடுத்திருந்த மைக் ஹஸ்ஸி, வினய்குமாரின் பந்தில் விராட் ஹோலியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து டேவிட் ஹஸ்ஸியுடன் கிறிஸ்டியன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது. 32 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை எடுத்தது. டேவிட் ஹஸ்ஸி ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 61 ரன்களையும் கிறிஸ்டியன் 17 ரன்களையும் எடுத்திருந்தனர். வினய்குமார் 3 விக்கெட்டுகளையும், ரோகித்சர்மா, ராகுல் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 217 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரும் கவுதம் காம்பீரும் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் டெண்டுல்கர், ஸ்டார்க்கின் பந்தில் ரிக்கி பாண்டிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 2 மட்டுமே. அடுத்ததாக காம்பீரும் 5 ரன்கள் எடுத்த நிலையில் மெக்கேயின் பந்தில் விக்கெட் கீப்பர் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்ததாக விராட் ஹோலியுடன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 64 க்கு உயர்ந்தபோது 31 ரன்களை எடுத்திருந்த விராட் ஹோலி, மெக்கேயின் பந்தில் கிளீன்போல்டானார். அடுத்து ரெய்னா களமிறங்கினார். மேலும் ஒரு ரன் சேர்ந்த நிலையில் ரோகித் சர்மாவும் மெக்கேயின் பந்தில் கீப்பர் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து அணியின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்தபோது 4 ரன்களை எடுத்திருந்த சுரேஷ் ரெய்னா, கிறிஸ்டியன் பந்தில் டேவிட் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து தோனியுடன் ஜோடி சேர்ந்தார் ரவீந்திர ஜடேஜா. இந்த ஜோடியும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 25 பந்துகளில் 19 ரன்களை எடுத்திருந்த ஜடேஜா, மெக்கேயின் பந்துவீச்சில் டேவிட் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இந்திய அணி 22.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய அஸ்வின் தமது பங்கிற்கு 5 ரன்களை மட்டும் சேர்த்து ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 120 ரன்களில் 7 வது விக்கெட்டையும் இழந்தது. அடுத்து ராகுல் சர்மா 1 ரன் மட்டும் எடுத்து தோர்த்தியின் பந்தில் போல்டானார். இதனால் 123 வது ரன்னில் 8 வது விக்கெட்டும் பறிபோனது. அடுத்த சிறிது நேரத்தில் 29 ரன்களை எடுத்திருந்த தோனியும் தோர்த்தியால் அவுட்டாக்கப்பட்டார். அப்போது இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து குமாருடன், வினய்குமார் ஜோடி சேர்ந்தார். இவர்கள் அணியின் ஸ்கோரை 150 க்கு உயர்த்தினர். இந்நிலையில் 15 ரன்களை எடுத்திருந்த குமார், மெக்கேயின் பந்தில் ஹாரிஸால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதனால் இந்திய அணி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. வினய்குமார் ஆட்டமிழக்காமல் 12 ரன்களை எடுத்திருந்தார். இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் மெக்கே 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் தோஹர்த்தி 2 விக்கெட்டுகளையும் கிறிஸ்டியன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் முறையாக சர்வதேச ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய மேத்யூ வாடே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 புள்ளிகளை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.