எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ, பிப்.7 - உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை (8 ம் தேதி) முதல் கட்ட தேர்தல் நடப்பதையொட்டி இம்மாநிலத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் மொத்தம் 55 சட்டமன்ற தொகுதிகளில் நடக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபைக்கு மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதா கட்சி போன்ற பிரதான கட்சிகள் போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
முதல்வர் மாயாவதி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சோனியாவின் மகள் பிரியங்கா போன்ற தலைவர்கள் உ.பியில் முகாமிட்டு பிரச்சார களத்தை கலக்கி வருகிறார்கள். இந்த நிலையில் இம்மாநிலத்தில் நாளை 8 ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக இம்மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. 2 வது கட்ட தேர்தல் பிப்ரவரி 11 ம் தேதியும், 3 வது கட்ட தேர்தல் வரும் 15 ம் தேதியும், 4 வது கட்ட தேர்தல் வரும் 19 ம் தேதியும், 5 வது கட்ட தேர்தல் வரும் 23 ம் தேதியும், 6 வது கட்ட தேர்தல் வரும் 28 ம் தேதியும், இறுதிக்கட்ட தேர்தல்( 7 வது) மார்ச் 3 ம் தேதியும் நடக்கவுள்ளது.
இந்த நிலையில் நாளை 8 ம் தேதி 55 சட்டமன்ற தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாநில போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மத்திய துணை ராணுவப் படையை சேர்ந்த 680 கம்பெனி போலீசார் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு இவர்கள் கொடி அணிவகுப்பும் நடத்தினர். ஏற்கனவே உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை முன்னிட்டு அங்கு கணிசமான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே போல் இந்த மாநிலத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக உயர் போலீஸ் அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாத ஒழிப்பு படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோரும் குவிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் உள்ள உயர் தலைவர்களுக்கு தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் மூலம் அச்சுறுத்தல் இருப்பதால் இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கலவரம் ஏதும் நடந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பைசாபாத் உள்ளிட்ட பதட்டமான மாவட்டங்களில் அடங்கிய 55 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீசார், இந்திய - திபெத் எல்லை போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், அரியானா ஆயுத போலீஸ் படையினர், மத்திய பிரதேச ஆயுத படையினர் ஆகியோரும் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் தேர்தல் அமைதியாக நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. வாக்குப் பதிவு எந்திரங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் மார்ச் 6 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதுவரையிலும் வாக்கு பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும்.
இந்நிலையில் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நேற்று முறைப்படி தொடங்கியது. மாநில கவர்னர் ஜோஷி, முறைப்படி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த இறுதிக்கட்ட தேர்தல் 60 சட்டமன்ற தொகுதிகளில் நடக்கிறது. மொராதாபாத், ரேபரேலி, லக்னோ டிவிசன்களில் உள்ள 10 மாவட்டங்களில் இந்த இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. மொத்தம் 1.8 கோடி வாக்காளர்கள் இறுதிக்கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதற்காக 17 ஆயிரத்து 640 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 19 ஆயிரத்து 404 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த இறுதிக்கட்ட தேர்தலுக்கான மனுக்களை வேட்பாளர்கள் 16 ம் தேதி வரை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநிலத்தில் 55 தொகுதிகளில் நாளை 8 ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான பிரச்சாரம் நேற்றோடு முடிவுக்கு வந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தலை முன்னிட்டு எந்த இடத்திலும் கட்சி கொடிகளோ, போஸ்டர்களோ, பேனர்களோ காணப்படவில்லை. காரணம், தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் அப்படி. தேர்தல் கமிஷனின் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடக்கிறது. இருந்தாலும் கூட, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, அவர்களுக்கு மதுபானம் கொடுப்பது போன்ற புகார்கள் இல்லாமல் இல்லை. இதுபோன்ற காரியங்கள் அங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. இந்த தேர்தல் முக்கியமான நான்கு கட்சிகளுக்குமே ஒரு பலப்பரிட்சை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று முழு மூச்சாக பிரச்சாரம் செய்து வருகிறார் ராகுல் காந்தி. இதே போல் பா.ஜ.க. தலைவர் கட்காரியும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார