முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது

வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமேஸ்வரம்.பிப்-10 - நடுக்கடலில் இயந்திர பழுதால் தவித்துக்கொண்டிருந்த ஒரு படகையும் அதில் இருந்த மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 600 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. அவற்றில் பெரும்பாலான படகுகள் இன்று மதியம் வரை திரும்பி வந்தன. அதில் ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜான்பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மட்டும் மதியம் வரை கரை திரும்பவில்லை. அது கறித்து விசாரித்தபோது அவரது படகு நடுக்கடலில் மீன்படித்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட இயந்திர பழுதால் தவித்துக்கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த படகை தங்களது கப்பலில் கட்டி தலைமன்னாருக்கு இழுத்து சென்று விட்டதாகவும் மற்ற மீனவர்கள்தெரிவித்தனர் இ;நத தகவலை அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மற்ற மீனவர்க்ள கரைக்கு வ்நது தெரிவித்தனர். இலங்கை கடற்படை இழுத்து சென்ற படகில் ஜான்பிரிட்டோ, மரியகிளாசன்,சகாயராபர்ட்,பெசின் ஆகிய 4 மீனவர்கள் இருந்ததாக கூநப்படுகிறது.

மற்றொரு படகில் சென்ற மீனவர் அளித்த பேட்டியில்,  நடு;க்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த படகு இயந்திர பழுது ஏற்பட்டு மேலே செல்ல முடியாமல் இருந்தது. அதை கட்டி இழுத்து வரலாம் என்று நினைத்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த படகை இழுத்து சென்றுவிட்டனர்என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்