முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி பணத்தை வீண் செய்கிறார் மாயாவதி: பிரியங்கா

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

 

உ.பி, டிச. 11 - மக்களின் வரிப்பணத்தை மக்களுக்காக செலவு செய்யாமல் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி சிலைகள் அமைப்பதிலும், பூங்காக்களை அழகுபடுத்துவதிலுமே வீணடிக்கிறார் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார். உ.பி மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார் பிரியங்கா. ராகுல் காந்தியின் தொகுதியான அமேதி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், முதல்வர் மாயாவதியை கடுமையாக தாக்கி பேசினார். 

மக்கள் வரிப்பணத்தை மக்களுக்காக செலவிடாமல் தேவையற்ற சிலைகள் அமைப்பதிலும், பூங்காக்களை அழகுபடுத்துவதிலும் வீணாக்குகிறார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை அபகரித்து கொண்டு பகுஜன் சமாஜ் கட்சியினர் தங்களை மட்டும் வளர்த்து கொண்டிருக்கின்றனர். 

முன்பு முலாயம்சிங் யாதவ் நடத்தியது குண்டர்களின் ஆட்சி என்றால் மாயாவதி நடத்துவது கொள்ளையர்களின் ஆட்சியாக இருக்கிறது. 22 ஆண்டுகளாக அழிவு பாதையில் சென்று விட்ட மாநிலத்தை சீர் செய்ய வேண்டுமானால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளியுங்கள் என்று பிரியங்கா பிரச்சாரம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்