முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப் - தயாநிதி சந்திப்பு: விளக்கம் கேட்கிறது பா.ஜ.க.

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, பிப்.11 - மத்திய அமலாக்க துறையால் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தயாநிதி மாறன் நள்ளிரவில் சந்தித்து பேசியது ஏன் என்று பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது. பிரணாப்புக்கும், தயாநிதிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போது பேசப்பட்ட விஷயங்கள் என்ன என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரணாப் முகர்ஜியை நள்ளிரவில் தயாநிதி மாறன் சந்தித்து பேசியது பற்றி ஊடகங்கள் மூலம்தான் கேள்விப்பட்டோம். புகாருக்கு உள்ளான நபர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து பேசியிருப்பது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது. இதை மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்