முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      சினிமா
Image Unavailable

ராமநாதபுரம், பிப்.12 - இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகிய இருவரும் வரும் மார்ச் 7 ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் 2008 ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அவர்கள் வெள்ளிக் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் வருகிற மார்ச் 7 ம் தேதி ஆஜராகுமாறு மாவட்ட முதன்மை நீதிபதி(பொறுப்பு) சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்