முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரம் விரைவில் சிக்குவார்

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,பிப்.- 13 - மதுரை மாவட்ட ஜனதாக்கட்சி சார்பில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், கூடங்குளம் அணுமின்நிலையம், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பான விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். இதில் அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி கலந்து கொண்டு பேசியதாவது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு இதற்கு முன்பிருந்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான்தான் முதன் முதலில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த தீர்ப்பை இன்னும் நிறைவேற்ற முடியாமல் உள்ளது. உடனடியாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமுல் படுத்தினால் நமக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது.  கூடங்குளம் அணுமின் நிலையத்தை தொடங்கி இருந்தால் நமக்கு இந்த மின்சார தட்டுப்பாடு இருந்து இருக்காது. அணு மின் நிலையத்தை திறக்கவிடாமல் வெளிநாட்டு சதி இருப்பதாக நான் அப்போதே கூறினேன். இப்போது அந்த கருத்தை மத்திய மந்திரிகளும் கூறுகிறார்கள். வெளிநாட்டினர் இந்தியாவை துண்டாட வேண்டும்  என்று சதி செய்கின்றனர். அதற்கு நாம் பலியாகி விடக்கூடாது. எனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டை ஏலம் மூலம் விற்பனை செய்திருந்தால் மத்திய அரசுக்கு ரூ. 1லட்சத்து 76 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்திருக்கும். ஆனால் ராஜா, சிதம்பரம் சேர்ந்து முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்க முடிவு செய்தனர். இதனால் மத்திய அரசுக்கு வெறும் 16 ஆயிரம் கோடி மட்டுமே வருமானம் கிடைத்தது. இந்த மிகப்பெரிய ஊழலில் ராஜா மட்டுமே தற்போது சிக்கி இருக்கிறார். விரைவில் சிதம்பரமும் சிக்குவார். இந்த ஊழல் பணம் சோனியா, கருணாநிதி உள்பட பலரை சென்றடைந்திருக்கிறது. இவ்வாறு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்