எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப். - 13 - போரூரில் நள்ளிரவில் குத்திக் கொல்லப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் கொலை வழக்கில் துப்புத்துலங்கியது. போலி ஆவணம் மூலம் வாங்கிக்கொடுத்த ரூ.50 லட்சம் கடனை பற்றி போலீசில் புகார் அளிக்காமல் இருக்க ரூ.15 லட்சம் கேட்டு அம்பிகா மிரட்டியதால் கடன் பெற்ற பெண்கள் 3 பேர் கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையொட்டி 3 பெண்கள், கொலையாளிகள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கத்தில் வசித்து வந்த சுயஉதவி குழு துணைத்தலைவி அம்பிகா கடந்த மாதம் 23-ந்தேதி நள்ளிரவில் வீட்டு அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் வேடத்தில் நள்ளிரவில் வீடு புகுந்த கொலையாளிகள் விசாரணை என்ற பெயரில் அவரை அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க கமிஷனர் திரிபாதி உத்தரவின்பேரில் இணை கமிஷனர் சங்கர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். அம்பிகா மகளிர் சுய உதவிக்குழு சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கு கடன் வாங்கி கொடுத்து இருப்பது தெரிய வந்தது. கடன் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன் பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டது. இந்த கொலை தொடர்பாக 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு: 1. அன்னமுத்து, ஒரகடம், அம்பத்தூர் 2. திலீபன், குன்றத்தூர். 3. ராஜ்குமார், கள்ளிக்குளம், அம்பத்தூர் 4. இன்னொரு ராஜ்குமார், ஒரகடம். இவர்களில் அன்னமுத்துவும், ராஜ்குமாரும் ஊர்க்காவல் படை வீரர்கள். அதே பகுதியைச் சேர்ந்த மாலா, சுமித்ரா, சுசிலா ஆகிய 3 பெண்களுக்கும் மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக அம்பிகா போலி ஆவணம் மூலம் ரூ. 50 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இந்த கடனை அவர்கள் ஒழுங்காக திருப்பி செலுத்தவில்லை. இதனை அம்பிகா கண்டித்தார். இதனால் 3 பெண்களுக்கும், அம்பிகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சுமித்ரா, தனக்கு தெரிந்த ஊர்க்காவல் படை வீரர் அன்னமுத்து மூலமாக அம்பிகாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புக்காக போரூர் பகுதிக்கு வந்திருந்த அன்னமுத்துவுக்கும், சுமித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சுமித்ரா, மகளிர் சுய உதவிக் குழு தலைவி அம்பிகாவின் தொந்தரவு பற்றி கூறினார். அவரை எப்படியாவது தீர்த்துக் கட்டினால்தான் நாங்கள் 3 பேரும் நிம்மதியாக வாழ முடியும் என்று அன்னமுத்துவிடம் கூறினார். இதன் பிறகு கொலைக்கான சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அம்பிகாவை போலீஸ் என்று கூறி அழைத்தால்தான் வருவார் என்று கூறியுள்ளார். இதற்காக தொகை பேசப்பட்டு முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை சுமித்ரா கொடுத்துள்ளார். அன்னமுத்து தனது நண்பர்களான ராஜ்குமார், தீலிபன், இன்னொரு ராஜ்குமார் ஆகியோருடன் பேசி அம்பிகாவை கொலை செய்வது பற்றி ஆலோசனை நடத்தினார். கடந்த 23-ந்தேதி நள்ளிரவில் 4 பேரும் 2 மோட்டார்சைக்கிள்களில் போரூர் சென்றுள்ளனர். பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அம்பிகா வசித்து வரும் கெருகம்- பாக்கத்துக்கு நடந்து சென்றனர். அன்னமுத்துவும், ராஜ்குமாரும் ஊர்க்காவல் படை சீருடையில் அம்பிகாவின் வீட்டுக்குள் சென்றனர். அங்கிருந்த அம்பிகாவிடம் போலீஸ் என்று கூறிய இருவரும் சுயஉதவிக்குழு கடன் சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி வெளியே அழைத்து சென்று கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் அம்பிகாவை கொலை செய்ய தூண்டிய சுமித்ரா, சுசிலா, மாலா ஆகிய 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடன் தகராறில் பெண் களே ஆட்களை ஏவி இன்னொரு பெண்ணை கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை தொடர்பாக 3 பெண்களில் ஒருவரான சுமித்ரா போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு: எனக்கும், எனது தோழிகள் சுசிலா, மாலா ஆகியோருக்கும் அம்பிகா சுயஉதவிக்குழு மூலமாக போலி ஆவணம் தயாரித்து காஞ்சீபுரம் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ. 50 லட்சம் கடன் வாங்கி கொடுத்தார். அந்த வங்கியில் தீ விபத்து ஏற்பட்டு ஆவணங்கள் எரிந்து நாசமாகி விட்டது. இதனால் கடனை திருப்பி செலுத்த வேண்டாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அம்பிகா எங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார்.
ரூ.15 லட்சம் தனக்கு தந்தால் காட்டிக் கொடுக்காமல் இருப்பதாக தொந்தரவு கொடுத்தார். அம்பிகா உயிரோடு இருந்தால் எங்களை காட்டி கொடுத்து விடுவார் என்று பயந்தோம். இதையடுத்து ஊர்க்காவல் படை வீரர் அன்னமுத்துவிடம் இதனை தெரிவித்தேன். அவர் நான் பார்த்துக் கொள்கிறேன். இதற்கு மேல் உங்களுக்கு பிரச்சினை ஏதும் இருக்காது என்று கூறினார். இதன் பிறகு அம்பிகாவை கொலை செய்ய திட்டம் தீட்டி ரூ. 50 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்தோம். அவரும், அவரது நண்பர்களும் சேர்ந்து அம்பிகாவை கொலை செய்தனர். இவ்வாறு சுமித்ரா போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
பெண்களே கூலிப்படையை ஏவி பெண்ணை கொன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
தேர்தல் விதிமீறல் புகார்: நீலகிரியில் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு
29 Mar 2024நீலகிரி, பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு: ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
29 Mar 2024புது டெல்லி, டெல்லியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.