முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக நந்தகுமார் பொறுப்பேற்றார்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் பிப்- 13 - ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக க.நந்தகுமார் இன்று போறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசின் முன்னோடி திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க பாடுபடுவேன் என்று கூறினார்.ராமநாதபரம் மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக க.நந்தகுமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அவர் திருப்பத்துாரில் உதவி கலெக்டராக பணிபுரிந்துள்ளார். தமிழக அரசின் நிதித்துறையில் பணியாற்றி வந்த அவர் தற்போது ராமநாதபரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு;ளளார். அவர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயராமனிடம் இருந்து மாவட்ட ஆட்சியர் பொறுப்பை எற்றுக்கொண்டார்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராமநாதபரம் போன்ற ஒரு முக்கியமான மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழக அரசு அறிவித்துள்ள முன்னோடி திட்டங்களின் பயன் பொதுமக்களை அடைய பாடுபடுவேன். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்