முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக -கேரள எல்லையில் நக்சல்கள் ரகசிய கூட்டம் திடுக் தகவல்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

கொல்லம், பிப். - 16 - தமிழக,கேரள எல்லையில் உள்ள வனப் பகுதிகளில் நக்சலைட்டுகள் ரகசிய கூட்டம் நடத்தியதாக ராணுவம் திடுக் கிடும்  தகவலை வெளியிட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு -- தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள அச்சன் கோவில் வனப் பகுதியில் நக்சலைட்டுகள் கடந்த மாதம் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு, கேரளாவில் ஆள் நடமாட்டம் இல்லாத வனப் பகுதியில், மா வோ நக்சலைட்டுகள் ரகசிய கூட்டம் நடத்துவதாகவும்,  ராணுவப் பயிற்சியி ல் ஈடுபடுவதாகவும், ராணுவ உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி இரு மாநில அரசுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடு த்து வனப் பகுதிகளில் தமிழக,கேரள போலீசார் தீவிர தேடுதல் வேட்டையி ல் ஈடுபட்டனர். ஆனால் அதையும் மீறி தமிழக, கேரள எல்லையில் உள்ள அச்சன் கோவில் வனப் பகுதியில் நக்சலைட்டுகள் ரகசி ய கூட்டம் நடத்தியதாக ராணுவ உளவு த் துறைக்கு ரகசிய  தகவல் கிடைத்துள்ளது.  உடனே ராணுவம் மற்றும் போலீஸ் நுண்ணறிவு துறையினர் அச்சன்கோவி ல் வனப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில், ரகசிய கூட்டம் நடத்திய து உண்மை தான் என உறுதியாகி இரு க்கிறது.
கடந்த மாதம் 21, 22 -ம் தேதிகளில் இந் த ரகசிய கூட்டம் நடந்துள்ளது. தமிழக த்தைச் சேர்ந்த நக்சலைட்டு தலைவரா  ன சேதுராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 50 பேர் கலந்து கொ   ண்டு உள்ளனர். இதில் பெரும்பாலோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் தமிழகத் தைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து தமிழக கியூ பிரிவு மற்றும் நுண்ணறிவு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்