முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கில் சாட்சியாக சேர்க்க ஆ.ராசா புதிய மனு

வெள்ளிக்கிழமை, 30 மே 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.31 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நீதிபதி ஓ.பி.சைனி முன் ஆஜராகி தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள் ளார். இந்நிலையில், தன்னை வழக்கில் ஒரு சாட்சியாகவும் சேர்க்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்க கோரப்பட்டுள்ளது. சாட்சியாக சேர்ப்பது குறித்து நீதிபதி முடிவு செய்யவுள்ளார். 2ஜி ஊழலில் ரூ.200 கோடி கலைஞர் டிவி-க்கு பரிமாற்றம் நடந்தது குறித்து அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த வழக்கு புதனன்று விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனை வரும் நேரில் ஆஜராகினர். குற்றப்பத்திரிகை குறித்து படித்துப் பார்த்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் தரப்பில் கோரப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago