முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 17 மணி நேர மின்தடை: புழுதிப் புயலுக்கு பலி 45

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 2 - டெல்லியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப் பெரிய சூறாவளி காற்று தாக்கியது. டெல்லி நகரை தலைகீழாக புரட்டிப் போட்டு மக்களை கதிகலங்க செய்யும் வகையில் சூறாவளி காற்றின் தாக்கம் இருந்தது. டெல்லியின் பல பகுதிகளிலும் சுழன்று வந்த அந்த புயலின் ஒரு புழுதிப் புயலாக இருந்தது. இந்த புழுதிப் புயல் மணிக்கு சுமார் 100 முதல் 130 கி.மீ வேகத்தில் வீசியது. 

அப்போது பலத்த மழையும் பெய்தது. புழுதிப் புயல் சீற்றம் காரணமாக டெல்லியில் சுமார் 400 மரங்கள் வேரோடு சாய்ந்தன. 12 பேர் உயிரிழந்தனர். டெல்லியை பந்தாடிய அந்த புயல் நேற்று முன்தினம் 2வது நாளாக வட மாநிலங்களில் அச்சுறுத்தியது. அரியானா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்களில் புழுதிப்புயல் வீசியது. 

இதில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் நொறுங்கி சேதம் அடைந்தன. கார்களும் சேதமடைந்தன. பல ஊர்களில் மின் தடை ஏற்பட்டது. புழுதிப் புயல் சீற்றம் காரணமாக டெல்லியில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. சுமார் 17 மணி நேரம் டெல்லி மக்கள் மின்சார இணைப்பு கிடைக்காமல் அவதிப்பட்டனர். தற்போதுதான் டெல்லியில் நிலைமை சீரடைந்து வருகிறது. 

மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் முடங்கியது. சில இடங்களில் இன்னமும் போக்குவரத்து சீராகவில்லை. நேற்று முன்தினம் 2வது நாள் புழுதிப்புயல் வேகம் அதிகமாக காணப்பட்டது. புழுதிப்புயலுக்கு வட மாநிலங்களில் இதுவரை 45 பேர் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. நேற்றும் வட மாநிலங்களில் புழுதிப் புயல் வீசியது. இன்றும் சூறைக்காற்று வீச வாய்ப்பு இருப்பதாக டெல்லி நகர மக்களை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்