முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு அமைச்சகத்துக்கு புதிய இயந்திரம்

சனிக்கிழமை, 7 ஜூன் 2014      தமிழகம்

 

சென்னை, ஜூன்.8 - சென்னை அண்ணா சாலையில் உள்ள மத்திய கூட்டறவு அச்சகத்தில் புதிய கணினி படிவங்கள் அச்சடிக்கும் இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது.

ரூ.51.64 லட்சம் மதிப்பிலான புதிய கணினி படிவங்கள் அச்சடிக்கும் இயந்திரத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். இந்த புதிய இயந்திரத்தின் மூலம் நிரந்தர வைப்பு நிதி வட்டி ரசீது, பருவகால வைப்பீட்டு வட்டி ரசீது, ரொக்க ரசீது, கேஸ் ரசீது, வங்கி கணக்கு தொடக்க படிவங்கள் , நகைக்கடன் ரசீது, பொது, ரசீது, பங்கு ஈவுத்தொகை ரசீது போன்ற படிவங்களை அச்சடிக்க முடியும். மேலும், இந்த அச்சகம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு சார்பு துறைகளுக்குத் தேவையான படிவங்கள், மாதாந்திர புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஆண்டுதோறும் தேவையான தினசரி மற்றும் மாதாந்திர நாள்காட்டி, அனைத்தையும் தரமான முறையில் அச்சிட்டு நியாயமான விலைக்கு வழங்கி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கோகுல இந்திரா, வளர்மதி, மேயர் சைதை துறைசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்