முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கராச்சி விமான நிலையம் அருகே மீண்டும் தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கராச்சி, ஜூன்.11 - கராச்சி விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலைய வளாகத்தில் உள்ள சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் விமான நிலையத்தின் சுற்றுப்பகுதியில் உள்ள கட்டிடத்திலிருந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர். அங்கிருந்து சோதனைச் சாவடியின் இரண்டாவது அறையை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்நாட்டின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 

தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் நீடித்த கடும் சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், சிலர் அங்கிருந்து தப்பித்து ஓடியதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. சம்பவ இடத்திலிருந்து எழுந்த பயங்கர சப்தம், கராச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீவிரவாத தாக்குதலை அடுத்து விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்