முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்: 16 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

சனிக்கிழமை, 21 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூன் 21 - ஈராக்கில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ள பகுதியிலிருந்து 16 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 

ஈராக்கில் அரசுக்கு எதிரான ஈராக் மற்றும் லெவான்ட் இஸ்லாமிய தேசம் என்ற இயக்கம் அந்நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. அங்கு உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் வெளியுறவுத் துறையும், அங்கு உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் முயன்று வருகின்றனர். இந்த நிலையில், போர்ச் சூழல் உள்ள பாஜி மாகாணத்திருந்து 8 இந்தியர்களும், அன்பார் மாகாணத்திலிருந்து 8 இந்தியர்களும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. ஈராக்கில் உள்ள 120 இந்தியர்களில் 16 பேர் அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சயீத் அக்பரூதீன் தெரிவித்துள்ளார

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்