முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் தீவிரவாதிகள் நகரம் மீது குண்டு வீச்சு: 16 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

அம்மான், ஜூன் 23 - சிரியாவில் தீவிரவாதிகள் நகரம் மீது போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் 16  பேர் பலியாகினர். 

சிரியாவில் அல்கொய்தா ஆதரவுடன் ஐ.எஸ்.ஐ.எல். என்ற தீவிரவாத அமைப்பு செயல்படுகிறது. அவர்கள் சிரியாவில் நகரங்களை கைப்பற்றி இஸ்லாமிய நாடு அமைக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது இவர்கள் பிடியில் முஹாசன், தெர் அல் ஷோர் அல்புலில் மற்றும் அல்புயோமர் உள்ளிட்ட நகரங்கள் உள்ளன. இவை ஈராக் எல்லையில் உள்ளன. 

இவற்றில் தெர் அல் ஷோர் எண்ணெய் வளம் மிக்க பகுதி. எனவே அவற்றை மீண்டும் கைப்பற்ற சிரிய ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறது. நேற்று முன்தினம் தெர் அல் ஷோர் மற்றும் முஹாசன் நகரங்களில் தீவிரவாதிகளின் நிலைகள் மீது ராணுவத்தின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. 5 டவை இக்குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. அதில் பொதுமக்கள் மற்றும் தீவிரவாதிகள் என 16 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். முஹாசன் நகரில் மட்டும் 5 பேர் பலியாகி உள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்