முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப்ரீத்தி விவகாரம்: சாட்சியமளிக்கும் டெண்டுல்கர் மகன்

வியாழக்கிழமை, 26 ஜூன் 2014      சினிமா
Image Unavailable

 

மும்பை, ஜூன்.27 - நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தொழிலதிபர் நெஸ் வாடியா விவகாரத்தில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் சாட்சியமளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.பி.எல். போட்டிகளின் போது மும்பை வான்கடே மைதானத்தில் முன்னாள் காதலர் நெஸ் வாடியா தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் புகார்.இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ப்ரீத்தி ஜிந்தாவிடம் மும்பை போலீசார் வான்கடே மைதானத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இவ்வழக்கில் சாட்சியமளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ப்ரீத்தி ஜிந்தா - நெஸ் வாடியா தகராறின் போது அர்ஜூன் டெண்டுல்கரும் அருகில் இருந்ததாகவும் அவரிடமும் நெஸ் வாடியா அத்துமீறி நடந்தார் என்றும் கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து அர்ஜூன் டெண்டுல்கரிடமும் மும்பை போலீசார் வாக்குமூலம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்