எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாக்தாத், ஜூன் 29 - ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கும், அரசு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் தீவிரவாதிகளின் கை ஓங்கியுள்ளது. மொசூல், திக்ரித், கிர்குக், பலூஜா, பாய்ஜி உள்ளிட்ட பல நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவற்றை மீட்க ராணுவம் கடும் பிரயத்தனம் செய்கிறது. ஆனால் முடியவில்லை. ஆனால் தீவிரவாதிகளை அடக்கி கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் அவர்களிடம் அதிநவீன போர்க்கருவிகள் உள்ளன. அவற்றை சன்னி பிரிவை சேர்ந்த அண்டை நாடுகள் வழங்கி உள்ளன.
மேலும் அவர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகின்றனர். ஈராக் ராணுவத்தில் உள்ள சன்னி பிரிவு வீரர்களும் போரில் ஈடுபட மறுக்கின்றனர். இது போன்ற காரணங்களால் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் 2011ம் ஆண்டில் வெளியேறின. அதன் பிறகுதான் அங்கு தீவிரவாதிகள் கை ஓங்கியது. அங்கு முகாமிட்டிருந்த போது ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். பலத்த சேதம் ஏற்பட்டது.
தற்போது நிலைமையை சமாளிக்க மீண்டும் அமெரிக்க உதவியை ஈராக் நாடியது. ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் உடனடியாக அதில் தலையிட விரும்பவில்லை. நிலைமையை உற்று கவனிப்பதாக ஒபாமா தெரிவித்தார். ராணுவத்தை அனுப்ப மாட்டோம் என்றும் அறிவித்தார். ஆனால் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அங்கு முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களை பாதுகாக்க 300 ஆலோசகர்களை அனுப்புவதாக அறிவித்தார். அவர்கள் ஈராக் ராணுவ வீரர்களுக்கு போர் பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 180 பேர் பாக்தாத் வந்து விட்டனர். ஆலோசகர்களாக இருந்தாலும் அவர்கள் ராணுவ வீரர்கள் ஆவர். இதற்கிடையே தீவிரவாதிகளையும் அவர்களின் இருப்பிடங்களையும் கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பறக்க விடப்படும் என்று அமெரிக்கா அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் தலைநகர் பாக்தாத் நகரின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் பறந்து வட்டமடிக்கின்றன. அவற்றில் ஹெல்பயர் என்ற ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போது அவை சன்னி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை. அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றன. ஆனால் நிலைமை மேலும் மோசமடையும் பட்சத்தில் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதையே அது காட்டுகிறது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான்கிர்பி தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் பாக்தாத் நகரின் மீது ஆளில்லா விமானங்களுடன் ஆட்கள் இயக்கும் விமானங்களும் பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போது அவை பொதுமக்களின் பாதுகாப்புக்காக வானில் வட்டமிடுகின்றன. அதே நேரத்தில் தேவைப்படும் போது தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் சூசகமாக கூறியுள்ளார். இதற்கிடையே தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் திக்ரித், கிர்குக் உள்ளிட்ட நகரங்களில் இந்திய தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களை அழைத்து வர மத்திய அரசு போர்க்கப்பலை அனுப்புகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தவிக்கும் 39 இந்திய கட்டிட தொழிலாளர்களை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.