முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் காதல் திருமணம் செய்த தம்பதி கொலை

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

லாகூர், ஜூன்.30 - பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் அருகேயுள்ள சாத்ரா கிராமத்தை சேர்ந்தவர் முயாபியா பீபி. இவர் பக்கத்து கிராமமான ஹசானாபாத்தை சேர்ந்த சஜ்ஜத் அகமது என்ற வாலிபரை காதலித்தார்.

இவர்கள் அருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதற்கு முயாபியா பீபிவின் பெற்றோர் எதிர்த்தனர். எனவே, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். இச்சம்பவம் கடந்த 18-ஆம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் ஹசானாபாத் கிராமாத்துக்கு திரும்பி வந்து குடித்தனம் நடத்தினர். அதை அறிந்த முயாபியா பீபியின் தந்தை தில்சத் அவரது குடும்பத்தினர் 6 பேருடன் அங்கு வந்தார். வீட்டிற்குள் புகுந்து புதுமண தம்பதி இருவரையும் அடித்து உதைத்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் துன்புறுத்தி சித்தரவதை செய்தனர். அத்துடன் விடவில்லை. அவர்களை நடு ரோட்டுக்கு தரதரவென இழுத்து வந்தனர்.

இருவரிகளின் கை கால்களை கட்டிப்போட்டனர். ஈவு இறக்கமின்றி காதல் தம்பதியின் தலைகளை துண்டித்து கொலை செய்தனர். இக் கொடூர சம்பவத்தை ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது.ஆனால், யாரும் தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ இல்லை. இதற்கிடையே போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்