முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் விடுதி குண்டு வெடிப்பில் 10 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

கனோ, ஜூன்.30 - நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் அட்டுழியம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவிகள் கடத்தல் மற்றும் குண்டு வைத்து பொதுமக்களை கொன்று குவிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு நைஜீரியாவில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது. அங்குள்ள பாய்சி சிட்டி விபசார விடுதிகள் உள்ளன. அங்குள்ள விபசார விடுதியில் நேற்று முன் தினம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. 10 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர். அச்சம்பவத்துக்கு போகோ ஹராம் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். நைஜீரியாவை இஸ்லாமிய நாடாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்