முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு: நீதிமன்றத்தில் ஆ.ராசா சாட்சியம்

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.2 - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சாட்சியளித்தார்.

2ஜி வழக்கில் தன்னையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி ராசா மனு அளித்திருந்தார். அவரது மனு ஏற்கப்பட்டதை அடுத்து, நீதிபதி ஓ. பி. சைனி முன்னிலையில், நேற்று அவர் சாட்சியம் அளித்தார்.

சாட்சியாக அவர் தெரிவித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. இன்றும் இந்த வழக்கில் ராசா சாட்சியளிக்க உள்ளார். கோடை விடுமுறையை தொடர்ந்து சுமார் 45 நாட்களுக்குப் பின்னர் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெற்று வரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்றும் கூடியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்