எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.9 - தமிழகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரெயில்வே பட்ஜெட் குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மத்திய ரெயில்வே மந்திரி தாக்கல் செய்துள்ள ரெயில்வே பட்ஜெட்டில், நவீன மயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
அனைத்துத் தொடர்வண்டி நிலையங்களிலும் தானியங்கி பயணச்சீட்டு வழங்குதல், இணையம் மூலம் நடைமேடைச் சீட்டு வழங்குதல், அலைபேசி வழியாக ரெயில் வருகை புறப்பாடு தகவல் அளித்தல், முக்கிய நிலையங்களில் ஒய்-ஃபை இணைய வசதி, முக்கிய ரெயில்கள், புறநகர் ரெயில்களில் தானியங்கிக் கதவுகள், முன்பதிவு செய்யாத பெட்டிகளுக்கும் இணையம் மூலம் பயணச் சீட்டு பெறும் வசதி, அஞ்சல் நிலையங்கள் மற்றும் அலைபேசி மூலம் முன்பதிவு வசதி போன்ற அறிவிப்புகள், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப அமைந்து இருக்கின்றது.
கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிய தடங்கள் அமைக்கவும், உள்நாட்டு முதலீடுகள் மற்றும் அந்நீய நேரடி முதலீடுகள் வரவேற்கப்படும் என்ற அறிவிப்பு ரெயில்வே துறை தனித்தன்மையை இழந்து தனியார்மயம் ஆக்கப்பட்டுவிடும் என்ற கவலையைத் தருகிறது.
தமிழ்நாட்டுக்கு ஒருசில புதிய வண்டிகளைத் தவிர, நீண்ட கால எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. சென்னை-கன்னியாகுமரி இரட்டைத்தடம் அமைக்கும் திட்டம், நிலுவையில் உள்ள பல்வேறு அகலப்பாதைத் திட்டங்கள், மின்மயமாக்கும் திட்டங்கள் மற்றும் புதிய தடங்கள் அமைத்திட அறிவிக்கப்பட்ட திட்டங்கள், ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
சென்னை இராயபுரத்தில் நான்காவது முனையம் அமைப்பது, சென்னை மையத் தொடர்வண்டி (சென்ட்ரல்) நிலையத்தை உலகத்தரத்திற்கு உயர்த்துவது போன்ற அறிவிப்புகள் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் தருகிறது.
எரிபொருள் விலை ஏற்றத்துக்கு ஏற்பக் கட்டணங்களை உயர்த்துவது என முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்படுத்திய கட்டண நிர்ணய ஆணையம் நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அவ்வப்போது கட்டண உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது பொதுமக்களின் சுமையை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும்.பட்ஜெட்டில் பொதுவாக வரவேற்கத்தக்க பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:
முன்பதிவு செய்த பயணிகளின் பெயர்களை டிஜிட்டல் முறையில் வைப்பது உட்பட ரயில்வே பட்ஜெட்டில் ஆடம்பரமான அறிவிப்புகளே வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கருத்து தெரிவித்துள்ளார்.
ரயில்வே பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக, தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் ஆக சதானந்த கவுடாவின் அறிவிப்புகள் இருக்கின்றன.
ஏற்கனவே காங்கிரஸ் அரசு திட்டமிட்டு, செயல்படுத்திய பல திட்டங்கள், இன்று புதிய அறிவிப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1 ரூபாய் வருமானத்தில் 93 பைசா செலவாகிறது என்று சொல்லியிருக்கிற சதானந்த கவுடா, வருமானத்தை உயர்த்துவதற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் என்ன நடவடிக்கை என்று சொல்லாமல், நேரடி அந்நிய முதலீட்டை கேட்போம் என்று அறிவிக்கிறார். ரயில்வே துறையை தனியார்மயமாக்குதலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரயில்வே துறையை திறந்து விடுவதற்கும் இன்றைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டண உயர்வு திரும்பப் பெறப்படவில்லை. மொத்தத்தில் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தரும் ரயில் பட்ஜெட் ஆகும்" என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் நேரில் வலியுறுத்தியும், அவை பற்றிய அறிவிப்பு ஒன்று கூட இடம்பெறாதது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும், இந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக அவர் குறைகூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் 2014 -15 ஆம் ஆண்டிற்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்திற்கு புதிய திட்டங்களும், அதிக தொடர்வண்டிகளும் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்திருக்கிறார் தொடர்வண்டி அமைச்சர் சதானந்த கவுடா.
தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 58 புதிய தொடர்வண்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 5 மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளன. இவற்றிலும் சென்னை-ஷாலிமார் பிரீமியர் விரைவு வண்டி, சென்னை-அகமதாபாத் வாரமிருமுறை விரைவு வண்டி, சென்னை-விசாகப்பட்டினம் வார விரைவு வண்டி ஆகியவை சென்னையை தாண்டி தமிழகத்திற்குள் வராதவை. இவற்றால் தமிழகத்திலுள்ள சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
மீதமுள்ள இரு தொடர்வண்டிகளில் ஒன்றான பெங்களூர் - ஓசூர் புறநகர் தொடர்வண்டி பெங்களூரிலுள்ள நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைத்துவர வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, இதனால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படாது.
கடந்த 5 ஆண்டுகளாகவே தொடர்வண்டித்துறை திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய தொடர்வண்டிகளையும், திட்டங்களையும் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, தொடர்வண்டி நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவாவது தொடர்வண்டித் திட்டங்கள் தொடர்பான தமிழகத்தின் கோரிக்கைகளை அமைச்சர் சதானந்த கவுடா நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.