முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வில் இந்திய வீரர்களுக்கு புகழாரம்

வியாழக்கிழமை, 10 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஜூலை 11 - முதலாம் உலகப் போர் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஐ.நா.வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.

அமைதியை நிலைநாட்ட போர் அளிக்கும்பாடம் என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சிக்கு பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் ஐ.நா. தூதுக்குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தின. நிகழ்ச்சியில் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் பான்கீமூன் வரலாற்றில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய போர்களில் ஒன்றான முதல் உலகப் போரில் உயிரிழந்த பல கோடி பேரை நினைவில் கொள்ள வேண்டிய நாள் இது.

எல்லை சண்டைகளையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் என்று முதல் உலகப் போர் தொடங்கிய போது கூறப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்ததென்னவோ அதற்கு நேர்மாறாகத்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். வரலாறு அளித்த அந்த படிப்பினையை உணராமல் இன்றும் உலகில் பலர் நல்லிணக்கத்துக்கு பதிலாக போரை தேர்ந்தெடுப்பது வருத்தமளிக்கிறது என்றார்.

ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி பேசுகையில், முதல் உலக போரில் மருத்துவ தொழில்நுட்ப சேவைகளையும் இந்திய வீரர்கள் மிகப் பெரிய அளவில் வழங்கினர். பிரிட்டன் படையினருக்கு அடுத்தபடியாக இந்திய ராணுவத்துக்குத்தான் அதிக உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. முதல் உலகப் போரில்தான் இந்திய ராணுவம் முதல் முறையாக முழு பரிணாமத்தை அடைந்தது என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய வீரர் குலாம் ரசூல்கான், போர் முனையில் இருந்து 1916ம் ஆண்டு தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் வாசிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்