முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி கடன்: கிரிக்கெட் வீரர் காம்ப்ளி மீது நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஜூலை 14 - ரூ. 50 லட்சத்திற்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர் மற்றும் பள்ளித் தோழர். வீடு கட்டவும், வாகனம் வாங்கவும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு காம்ப்ளிக்கு பணம் தேவைப்பட்டது. இதை முன்னிட்டு இவர் தன் மனைவி ஆன்டிரியாவுடன் டோம்பிவிலியில் உள்ள நகரி சகாரி வங்கியிடம் கடன் கேட்டு விண்ணப்பித்தார். இவ்விதம் இவர் ரூ. ஒரு கோடி வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடன் பாக்கியை முன்னிட்டு நகரி சகாரி வங்கி நேற்று முன்தினம் விளம்பரம் வெளியிட்டது. விளம்பரத்தில் காம்ப்ளி தன் கடன் பாக்கியை திருப்பி செலுத்தவில்லை என்றும் வங்கி அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்