முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசியா போட்டி: தென்கொரியா-வடகொரியா பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

சியோஸ், ஜூலை.16 - தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வடகொரிய வீரர்கள் பங்கேற்பது குறித்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவின் கடற்கரை நகரமான இஞ்ச்சியோனில் வரும் செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எல்லைப் பிரச்னை தொடர்பாக, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக 150 வீரர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று வடகொரியா கடந்த மே மாதம் அறிவித்தது. அவர்களுடன் ஊக்குவிப்பாளர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று வடகொரியா கூறியுள்ளது. இந்நிலையில், இரு நாடுகளின் அதிகாரிகள், தென்கொரியாவில் உள்ள பான்முஞ்சோம் என்ற கிராமத்தில் இன்று சந்தித்துப் பேசவுள்ளனர்.

அந் சந்திப்பின்போது, வடகொரிய விளையாட்டு வீரர்களை அழைத்து வருவது குறித்தும், அவர்களை தென்கொரியாவில் பாதுகாப்பாக தங்க வைப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , வடகொரியா தொடர் ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்