முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை: மரடோனா

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியாடி ஜெனீரோ, ஜூலை.16 - உலக கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருது அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சிக்கு வழஙக்ப்பட்டது.

அர்ஜென்டினா உலக கோப்பையை வெல்லாததால் அவரும் ஆர்வம் இல்லாமல் ஏமாற்றத்துடன் தான் இந்த விருதை பெற்றார். உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்சி இந்த போட்டித் தொடரில் 4 கோல்கள் அடித்து இருந்தார். 4 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றிருந்தார். இறுதிப்போட்டியில் அவர் கோல் அடிக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே.

இதற்கிடையே தங்கபந்து விருதுக்கு மெஸ்சி தகுதியானவர் இல்லை என்று அர்ஜென்டினாவை சேர்ந்த முன்னாள் பிரபல வீரர் டிகோ மரடோனா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தங்க பந்து விருது மெஸ்சிகொடுத்து இருக்க கூடாது. வர்த்தக ரீதியில் இருப்பவர்களின் விர்ப்பத்துக்காக அவருக்கு சிறந்த வீரர் விருது கொடுக்கப்பட்டது. இதற்கு அவர் தகுதியானவர் இல்லை. மெஸ்சிக்கு தங்க பந்து விருது வழங்கியது நியாயமற்றது இதை ஏற்றுக்கொள்ள இயலாது. அவர் அந்த விருதை வாங்கியே இருக்ககூடாது. இந்த போட்டித் தொடரில் அதிக கோல் அடித்த கொலம்பியா வீரர் ரோட்ரிசுக்குத்தான் தங்கபந்து விருதை வழங்கி இருக்க வேண்டும். அர்ஜென்டினாவை விட ஜெர்மனி சிறப்பாக விளையாடியது. 2-வது இடத்தை பிடித்ததன் மூலம் அர்ஜென்டினாவின் மதிப்பு உயர்ந்து இருக்கிறது.

மரடோனா தலைமையில் 1986-ஆம் ஆண்டு அர்ஜென்டினா உலக கோப்பையை வென்றது. அப்போது அவர் கோல்டன் பால் விருதையும் பெற்றார். மரடோனா போல் மெஸ்சி அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை பெற்றுத் தர முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றமே.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்