முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லார்ட்ஸ் வெற்றி: இஷாந்த் பந்து வீச்சுக்கு சச்சின் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஜூலை.23 - லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தக் காரணமாயிருந்த இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சை சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
நான் போட்டி முழுதையும் பார்க்கவில்லை, ஆனால் முக்கியமான தருணங்களைப் பார்த்தேன், இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சை பார்த்தேன். அவர் இவ்வாறு வீசியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவரது வளர்ச்சியை அருகில் இருந்து நான் பார்த்திருக்கிறேன், அவர் ஒரு கடின உழைப்பாளி மற்றும் சிறப்புத் திறமை பெற்றவர். முதல் நாள் ஆட்டத்தின் போதே நான் இந்தியாவின் கை இந்த டெஸ்ட்டில் ஒங்கியிருக்கிறது என்று எனது மகன் அர்ஜுனிடம் கூறினேன், முதல் டெஸ்ட் போட்டியில் மரியாதைக்குரிய விதத்தில் ஆடிய நம் அணி இந்த டெஸ்ட் போட்டியில் சவாலான முதல் நாள் பிட்சில் சிறப்பாக பேட்டிங் செய்தது.
முதல் நாள் ஆட்டத்தில் பெற்ற அனுகூலங்களை இரண்டாம் நாள் தொடர வேண்டுமென்று நான் கருதினேன், முதல் நாள் அடித்தளத்திலிருந்து தொடர்ந்து இங்கிலாந்துக்கு இந்தியா நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதைத்தான் இந்திய அணி செய்துள்ளது. இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் வெல்வது என்பது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இந்தப் போட்டியில் நான் பார்த்தது என்னவெனில், 5 நாள் ஆட்டத்தில் எவ்வளவு சிறப்பான ஆட்டங்கள் என்பதையே. இந்த வெற்றி எனக்கு, 2006ஆம் ஆண்டு ஜொகான்னஸ்பர்கில் பெற்ற வெற்றியையும், டர்பனில் 2010ஆம் ஆண்டு பெற்ற வெற்றியையும் நினைவூட்டுகிறது.
இந்த இரண்டு போட்டிகளிலும் அனைவரும் ஏதோவொரு விதத்தில் வெற்றிக்குப் பங்களிப்பு செய்தனர். இவையெல்லாம் ஆச்சரியத்தக்க கணங்கள், ஆனால் நாம் அதிகமும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டாம். என்று எச்சரிக்கையுடன் கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்