முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் நிலச்சரிவு: 8 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

காட்மண்டு, ஆக.04 - நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் உயிரிழந்தனர். குன்று ஒன்றிலிருந்து பெயர்ந்த கற்களும் மண்ணும் சங்கோஷி நதியில் விழுந்ததில் நதி அடைபட்டு ஏரி போல் மாறிவிட்டது. இதனால் நீரோட்டம் தடைபட்டு நாலாபுறமும் பாய்ந்து பல கிராமங்களில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

காத்மாண்டுக்கு வடகிழக்கே 75 கிமீ தொலைவில் உள்ள மங்கா கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட் டது. 24 வீடுகள் இதில் புதைந்தன. உள்ளூர் மக்களின் உதவியுடன் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கையில் 8 சடலங்கள் மீட்கப்பட்டன. இன்னும் நிறைய பேர் காணாமல் போயுள்ளதால் அவர்களும் நிலச்சரி வில் புதையுண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்