முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பலத்த மழை: 30 விமானங்கள் தாமதம்

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.10 - சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. இந்த மழை அதிகாலை வரை நீடித்தது. இரவு முழுவதும் மழைத் தூறல் விழுந்தது.

காலையில் மோசமான வானிலை காணப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய 26 உள்நாட்டு விமானங்கள் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய 4 விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. மழையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட பயணிகள் சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வர முடியவில்லை.

பெரும்பாலான பயணிகள் தாமதமாக வந்ததால் விமானங்கள் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்