முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்-காய்தாவைவிட்டு ஐ.ஸ்,சில் இணையும் தீவிரவாதிகள்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable


வாஷிங்டன், ஆக.12 - ஒரு காலத்தில் உலக நாடுகளுக்கு சம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அல்-காய்தா இ?க்கத்திலிருந்து விலகி, ஈராக், சிரியாவில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள ஐஎஸ் அமைப்பில் தீவிரவாதக் குழுக்கள் இணைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிகாரபி ஒருவரை மேற்கோள் காட்டி அந்நாட்டிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் இதழில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அல்-காய்தாவுடன்  இணைந்து செயல் பட்டு வந்த சிறு குழுக்கள், அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று ஐஎஸ் அமைப்பில் இணைந்து வருகின்றன. ஐஎஸ்ஐஎஸ்சின் அண்மைக் கால வெற்றிகளால், இந்தப் போக்கு தீவிரமடைந்துள்ளது. லிபியாவில் செயல்பட்டு வரும் அல்-காய்தாவோடு தொடர்பில்லாத தீவிரவாதக் குழுக்களும் ஐஎஸ் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.
இந்தப் போக்கிலனால், அண்மையில் தன்னை இஸ்லாமிய தேச கலிஃபாவாக அறித்துக் கொண்டுள்ள அபு பக்கர் அல்-பாக்தாதின் கரம் வலுவடைந்து வருவதாக பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என்ற வாஷிங்டன் போஸ்ட் இதழில் செய்தி வெளியாகியுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்