முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுபானங்களுக்கு கூடுதல் வரி: மசோதா தாக்கல்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக12:மதுபானங்களுக்கு கூடுதல் வரிவிதிக்கப்படதக்க ஆயத் தீர்வையைஉயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்கேற்ப சட்ட திருத்தம் செய்து,மசோதா தாக்கல்பட் டுள்ளது.

சட்டசபையில் மின்சார, மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் தாக்கல் செய்த சட்ட திருத்த மசோதாவில் கூறி இருப்பதாவது:-

அரசுக்கு கூடுதல் வருவாயை பெருக்கும் நோக்கில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களுக்கு பெரு மளவில் விதிக்கப்படதக்க ஆயத் தீர்வையை லிட்டருக்கு 125 ரூபாயில் இருந்து சாதாரண வகைகளுக்கு லிட்டருக்கு 250 ரூபாயாகவும், நடுத்தரவகைகளுக்கு லிட்டருக்கு ரூ.300 ரூபாயா கவும், உயர்தர வகைகளுக்கு லிட்டருக்கு 500 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப சட்ட திருத்தம் செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்