முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

புதன்கிழமை, 13 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

ஜம்மு, ஆக.14 - ஜம்மு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடந்த 5 நாட்களில் 4-வது முறையாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளனர்.

ஜம்மு மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது நேற்று இரவு பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆர்.எஸ்.புரா பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திய பாகிஸ்தான் படையினர் நள்ளிரவு 1 மணியளவில் தாக்குதலை நிறுத்தினர். பின்னர் மீண்டும் அதிகாலை 3 மணியளவில் மீண்டும் தாக்குதலை தொடர்ந்ததாகவும், அங்கிருக்கும் கிராமங்களை நோக்கியும் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் 5 பேரின் மீது சிறிய ரக துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்தியத் தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 நாட்களில் இந்திய எல்லை மீது பாகிஸ்தான் ராணுவம் 4-வது முறையாக அத்துமீறியுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவ படையினர் பதிலடி கொடுத்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்