முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 6-வது முறையாக பாக்., ராணுவம் அத்துமீறல்

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

ஜம்மு, ஆக.15 - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 5 நாட்களில் 6-வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

ஜம்மு- காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான பூஞ்ச் மற்றும் சில பகுதிகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில தினங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன் தினம் இரவு மீண்டும் ஹமிர்ப்பூர் அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. "பூஞ்ச் மாவட்டத்தின் ஹமிர்ப்பூரில் உள்ள இந்திய நிலைகள் மீது இரவு 9 மணி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்தியத் தரப்பில் இதற்கு பதில் கொடுத்தது. இதில் யாருக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை" என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் மணிஷ் மேத்தா தெரிவித்தார்.

கடந்த 5 நாட்களில் 6-வது முறையாக பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் இந்திய எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்