முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் கடும் நிலச்சரிவு: 7 பேர் பலி

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஆக.21 - ஜப்பானில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஜப்பானின் மேற்கு பகுதியில் ஹிரோஷிமாவில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்த மழை வெள்ளத்தில் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ஹிரோஷிமா பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று அதிகாலை 5 இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து கற்கள் உருண்டு, வீடுகளின் மேல் விழுந்தன. அப்பகுதியில், ஏற்கெனவே மழை வெள்ளத்தினால் சேறும் சகதியுமாக காணப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால் மேலும் பாதிப்பு ஏற்பட்டது.

வீடுகளின் மேல் விழுந்த கற்குவியலில் ஏராளமான மக்கள் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஹிரோஷிமா போலீசாரும், ஜப்பான் பேரிடர் மீட்பு குழுவும், சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டரில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வீடுகளின் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போன 13 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்