முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஆக 26:

சீனாவில் பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய 8 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா தெரிவித்துள்ளது. இவர்கள் சீனாவின் வட மேற்கு பகுதியில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் சின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் ஹூசேன் குக்ஸர், யூசுப் வெர்னியாஸ், யூசுப் அக்மத் ஆகிய மூவர் ஒரு தற்கொலை தாக்குதலை திட்டமிட்டனர். 2013ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இந்த தாக்குதலில் ஒரு பெண், அவரது மகன், மருமகள் ஆகியோர் வெடிமருந்து பொருத்திய காரை ஓட்டி சென்று டியானன்மன் சதுக்கத்தில் வெடிக்க செய்தனர். இந்த தற்கொலை தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். சின்ஜியாங் பகுதிக்கு வெளியே நடத்தப்பட்ட முதல் தற்கொலை தாக்குதல் இதுவேயாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்