முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கை: இலங்கை நிராகரிப்பு

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, ஆக.26 - இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்க 3 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் பரிந்துரையை அந்நாடு நிராகரித்தது.

முன்னதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கொழும்புவில் இந்த விவரம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். அந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது, மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியாவின் தரமான மீன்கள், இறால்கள் தற்போது இலங்கைக் கடற்பகுதியில்தான் உள்ளது. எனவே, இந்தியப் பகுதியில் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று ஆண்டுகளுக்கு இலங்கை கடற்பகுதியில் இந்திய மீன்வர்கள் மீன்பிடிக்க அனுமதி கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனாரத்னா இதுகுறித்து கூறுகையில், சுப்பிரமணியன் சுவாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை, என்றார்.

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வரும் 29-ஆம் தேதி இந்தியா - இலங்கை அதிகாரிகள் டெல்லியில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ள நிலையில் இலங்கை அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago